ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.. பீகார் வெற்றிக்கு மோடிக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்
சென்னை: பீகார் சட்டசபை தேர்தல் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் டுவிட்டரில் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கூறியுள்ளார்.
பாஜக-ஜேடியூ கூட்டணி பீகாரில் 125 தொகுதிகளை வென்று ஆட்சியை பிடித்துள்ளது.
இடைத் தேர்தலோ.. பொதுத் தேர்தலோ.. மொத்த இந்தியாவிலும் மோசமாக தோற்றது காங்கிரஸ்தான்! காரணம் இதுதான்
இதுகுறித்து டுவிட்டரில் ஓபிஎஸ் கூறுகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளுடன், பெரும்பான்மை பலத்தோடு வென்றதில் பெரும் மகிழ்ச்சி. இதற்காக எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதிஷ் குமாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments
o pannerselvam bihar assembly election 2020 bihar election 2020 ஓ பன்னீர் செல்வம் பீகார் சட்டசபை தேர்தல் 2020 பீகார் தேர்தல் 2020
English summary
It gives immense pleasure that BJP-led NDA has won the majority in the Bihar Assembly Polls obtaining 125 constituencies. My heartfelt congratulations to Hon. PM Shri.Narendra ModiNarendramodi and Nitish Kumar, says O.Pannerselvam.