சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கோயம்பேட்டிலிருந்து தேனி செல்லும் தனியார் பேருந்து மின் கசிவால் தீ விபத்து அதில் பயணம் செய்த முப்பத்தி ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

சென்னை கோயம்பேட்டிலிருந்து தேனி செல்லும் ஜாய் என்கின்ற தனியார் பேருந்து இன்று இரவு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் வந்தபோது, திடீர் மின் கசிவால் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. மின் கசிவு ஏற்பட்டதால் பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி பயணிகளை உடனடியாக இறங்கும்படி எச்சரித்து பயணிகளை இறக்கினார்

Omni bus burnt, passengers escape unhurt

பயணிகள் இறங்கிய உடன் தீ மளமளவென பரவியது. இதை அடுத்து தாம்பரம் சானட்டோரியம் தீ அணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஓட்டுநரின் துரிதமான செயலால் 35 பயணிகள் உயிர் தப்பினர்.

English summary
An Omnli bus bound for Theni got fir and burnt completlely. 35 passengers escaped unhurt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X