சென்னையில் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. 35 பயணிகளும் உயிர் தப்பினர்
சென்னை: சென்னை கோயம்பேட்டிலிருந்து தேனி செல்லும் தனியார் பேருந்து மின் கசிவால் தீ விபத்து அதில் பயணம் செய்த முப்பத்தி ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
சென்னை கோயம்பேட்டிலிருந்து தேனி செல்லும் ஜாய் என்கின்ற தனியார் பேருந்து இன்று இரவு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் வந்தபோது, திடீர் மின் கசிவால் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. மின் கசிவு ஏற்பட்டதால் பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி பயணிகளை உடனடியாக இறங்கும்படி எச்சரித்து பயணிகளை இறக்கினார்
பயணிகள் இறங்கிய உடன் தீ மளமளவென பரவியது. இதை அடுத்து தாம்பரம் சானட்டோரியம் தீ அணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஓட்டுநரின் துரிதமான செயலால் 35 பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னையில் பயங்கரம்.. ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது
— Oneindia Tamil (@thatsTamil) February 15, 2019
கோயம்பேட்டிலிருந்து தேனி கிளம்பிய பேருந்து தீப்பிடித்து எரி்ந்தது pic.twitter.com/E8SEGhXBh8