ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க நமது வாசகர்கள் அமோக ஆதரவு!
Recommended Video
சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது பிரிவை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. இதற்கான தீர்மானம் ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருக்கிறோம்.. காஷ்மீர் குறித்து முதல்முறையாக வாயை திறந்த வெள்ளை மாளிகை
யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு
அத்துடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என புதிய யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்தது. இது தொடர்பாக நாடு முழுவதும் பெரும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசுக்கு ஆதரவு
மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் வாசகர்களின் கருத்துகளை கேட்டிருந்தது. மொத்தம் 15,209 வாசகர்கள் பங்கேற்ற இக்கருத்து கணிப்பில், மத்திய அரசின் நடவடிக்கை நல்ல முடிவு என 8,367 பேர் அதாவது 55.01% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசுக்கு கணிசமான எதிர்ப்பு
அதேநேரத்தில் 3,240 பேர் (21.3%) மத்திய அரசின் நடவடிக்கை தவறான முடிவு என வாக்களித்துள்ளனர். 1,472 பேர் (9.68%) பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் 1,099 பேர் (7.23%) பலன் தந்தால் நல்லதுதான் என்றும் தெரிவித்துள்ளனர்.
குழப்பம் ஏற்படலாம் என கருத்து
மேலும் 1,031 பேர் (6.78%) தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர். பொதுவாக ஜம்மு காஷ்மீரை பிரித்ததற்கு வாசகர்கள் பெரும் ஆதரவையே கொடுத்துள்ளனர்.