தமிழகத்தில் மேலும் அதிமுக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா- கோவை அம்மன் அர்ச்சுனனுக்கு சிகிச்சை
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. கோவை அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சமாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஞாயிறு தோறும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.
அதேபோல் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன். செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி. அரசு, செஞ்சி திமுக எம்.எல்.ஏ. மஸ்தான், ராஜபாளையம் தங்கபாண்டியன் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது.
பிரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்பை கலைக்க வேண்டும்... தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
அதிமுகவில் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பரமகுடி அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, ஶ்ரீ பெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனனுக்கும் கொரோனா உறுதியானது. அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.