குழப்பம் தீர்ந்தது..எம்.இ, எம்.டெக் படிப்புகளில் சேர இனி டான்செட் போதும்.. அறிவித்தது அண்ணா பல்கலை.,
Recommended Video
சென்னை: பொறியியல் முதுநிலை படிப்புகளில் சேர ஒரே நுழைவுத்தேர்வு தான் நடத்தப்படும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. ஒரே நுழைவுத்தேர்வை மட்டுமே எழுதி எம்.இ, எம்.டெக் போன்ற உயர்படிப்புகளில் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ப்ளான், எம்.ஆர்க் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர, ஏற்கனவே டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் தனியாக AUCET என்ற நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது.
இதனால் மாணவர்கள் இரு நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. இக்குழப்பத்தை தீர்க்க ஒரே நுழைவுத்தேர்வு மட்டுமே நடத்த தமிழக உயர்கல்வித்துறை அறிவுறுத்தியது.
ஃபானி புயல்.. எங்கெல்லாம் அதிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்!
இந்நிலையில் முதுநிலை படிப்பு சேர்க்கைக்கு ஒரே நுழைவுத்தேர்வை நடத்துவது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் முதுநிலை படிப்பு சேர்க்கைக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்துவதே போதுமானது என்ற முடிவு எட்டப்பட்டது. இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தரான சூரப்பா, மாணவர்கள் எம்.இ, எம்.டெக் போன்ற உயர்படிப்புகளில் சேருவதற்கு டான்செட் எனப்படும் நுழைவுத்தேர்வை மட்டுமே எழுதினால் போதும் என கூறியுள்ளார்.
டான்செட்டுக்கு மாற்றாக புதிய நுழைவுத்தேர்வு (AUCET) நடத்தும் முடிவை கைவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எம்.இ, எம்.டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புபளுக்கான நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைகழகமே நடத்தும் என்றும் சூரப்பா அறிவித்துள்ளார்.