மாணவர்கள் போராட்டம்.. கலவரங்கள் ஏன்.. அதுவும் இங்கெல்லாம்தான் நடக்குது.. சரத்குமார் பகீர் புகார்
Recommended Video

சென்னை: தவறான பிரச்சாரங்கள் மூலம் மாணவ்ர்களை தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறுகையில், "குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்துக்கு எதிராக இதற்கு நாடு முழுவதும் கலவரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் குடியுரிமை சட்டத் திருத்த போராட்டங்கள் என்பது சமத்துவ மக்கள் கட்சி பார்வையில் இந்த தவறான புரிதலால் நடத்தப்படுகிறது" என்றார்.

குடியுரிமை சட்ட திருத்தம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்கிறது. ஆனால் யூகங்கள் அடிப்படையில் பொய்யான பிரசாரங்களால் கலவரம் அதற்கு எதிராக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சரத்குமார் விமர்சித்தார்.
இந்த போராட்டங்கள் குறிப்பாக பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலே நடத்தப்படுவதாகவும் சரத்குமார் குற்றம்சாட்டினார்.
அரசியல் நோக்கத்தோடு கலவரங்களை உருவாக்கப்படுவதாகவும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு வன்முறை நடைபெறுவதாகவும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது பேட்டியின் போது குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சிகள் .புரிதல் இல்லாத காரணத்தால் மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும் இலங்கை தமிழர்களுக்கான குடியுரிமை சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக சரத்குமார் தெரிவித்தார். ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி இருப்பதாக வலியுறுத்தி இருப்பதாகவும்.இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிசீலனை செய்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications