நான்தான் அதிமுக.. கெத்து காட்ட தலைமைக் கழகம் வந்த ஓபிஎஸ்- திடீர் ஆலோசனை
சென்னை: தமது கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது என்பதி காட்டும்விதமாக இன்று திடீரென அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் அணி துளிர்விட்டு வருகிறது. அதிமுகவில் அண்மையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளை இதை தொடர்ந்து வெளிப்படுத்தியே வருகின்றன என நாம் பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் இன்று மாலை திடீரென அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் வருகை தந்தார். அவருடன் செம்மலை உள்ளிட்டோரும் தலைமை அலுவலகம் வந்தனர். பின்னர் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தனியே ஆலோசனை நடத்திய செய்தி தீயாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், செயற்குழு கூட்டப் பணிகளுக்குத்தான் ஓபிஎஸ் அதிமுக தலைமைக் கழகம் வந்ததாக அங்கிருக்கும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
அதிமுகவில் 'நேற்று இல்லாத மாற்றம்'... திசை மாறுகிறதா காற்று? பரபரக்கும் ஆதரவு முகாம்கள்!
அதேநேரத்தில் அதிமுகவினரோ, அதிமுக எனும் கட்சி என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கிறது.. ஆட்சிக்கு மட்டும்தான் எடப்பாடி முதல்வர். இந்த வேறுபாட்டை தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்க வேண்டு என ஓபிஎஸ் தரப்பு இப்போது விரும்புகிறது. இதனை தொடக்கத்தில் இருந்தே செய்யாமல் விட்டுவிட்டார். ஆகையால்தான் இத்தகைய கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துகிறார் ஓபிஎஸ் என்கின்றனர்.