எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றலாமா.. வைத்திலிங்கம் மீது ஓபிஎஸ் அப்செட்
Recommended Video
சென்னை: எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் வகையில் வைத்திலிங்கம் எம்பி நடந்து கொள்வதாக கூறி கோபமாக இருக்கிறாராம் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.யுமான வைத்திலிங்கம் மீது ஓ.பி.எஸ். கோபமாக உள்ளாராம். தனக்கும், தனது மகனுக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில் வைத்திலிங்கம் செயல்படுவதாக ஓ.பி.எஸ்.நினைக்கிறாராம்.
இந்நிலையில் சசிகலாவை வாரிசு அரசியல் செய்வதாக கூறி ஒதுக்கி வைத்துவிட்டு ஓ.பி.எஸ். எப்படி வாரிசு அரசியல் செய்யலாம் என வைத்திலிங்கம் எடப்பாடியிடம் ஆவேசப்பட்டாராம். அதனை ஆமோதிப்பது போல் எடப்பாடியிடம் இருந்து பதில் வந்ததாம்.
இதையடுத்து ராஜன் செல்லப்பாவின் கருத்தான ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலுபடுத்தக்கோரி சில எம்.எல்.ஏ.களுக்கு சிக்னல் கொடுத்தாராம் வைத்திலிங்கம். அவர் சிக்னல் கொடுத்ததன் எதிரொலியாக குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ராமச்சந்திரன் ஓ.பி.எஸ்.பெயரை குறிப்பிட்டே வீடியோ வெளியிட்டார்.
முதல்வருடன் ராஜ் சத்யன் திடீர் சந்திப்பு.. மருமகளுக்கு மேயர் சீட் கேட்கிறாரா ராஜன் செல்லப்பா..?
அண்மைக்காலமாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு எந்த நிகழ்ச்சிகளிலும் ராமச்சந்திரன் தலைகாட்டுவதில்லை. இப்போது கூட கேரளாவில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார். திடீரென அவர் ஓ.பி.எஸை விமர்சித்து வீடியோ வெளியிட்டதன் பின்னணியில் வைத்திலிங்கம் உள்ளாராம்.
கடந்த தேர்தலில் குன்னம் தொகுதியில் ராமச்சந்திரன் போட்டியிட நால்வர் அணியில் இருந்த வைத்திலிங்கம் தான் சிபாரிசு செய்தாராம். இப்படி தன்னை வளர்த்து விட்ட வைத்திலிங்கத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததற்கு ஓ.பி.எஸ்.தான் காரணம் என கர்ஜிக்கிறாராம் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.
ஆனால் தனக்கு எதிராக இப்படி வைத்திலிங்கம் செயல்படுவதால் கடும் அதிருப்தி மற்றும் கோபத்தில் இருக்கிறாராம் ஓ. பன்னீர் செல்வம்.