அது எப்படி எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறது?- ப.சிதம்பரம் கேள்வி
சென்னை: அது எப்படி எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறது என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நேற்று இரவு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதுகுறித்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கூறுகையில் இது முழுக்க எதிர்க்கட்சிகளின் சதி. தமிழிசை வீட்டில் ஏன் சோதனை செய்யவில்லை என்றனர்.
திருமதி கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி
— P. Chidambaram (@PChidambaram_IN) April 17, 2019
இதுகுறித்து தமிழிசை கூறுகையில், வருமான வரித் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் சோதனை செய்தனர் என்றார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி.
அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது?!
— P. Chidambaram (@PChidambaram_IN) April 17, 2019
அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது?! 2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே என்றார் ப.சிதம்பரம்.
2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே
— P. Chidambaram (@PChidambaram_IN) April 17, 2019