விவசாயிகளின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது.. ப.சிதம்பரம் ட்வீட்
சென்னை: மத்திய அரசின் பிடிவாதமும், தவறை ஒப்புக்கொள்ளாத அகந்தையும்தான், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய காரணம் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ், மூத்த தலைவருமான, ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு-விவசாய பிரதிநிதிகள் இடையே, நேற்று நடைபெற்ற 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், சிதம்பரம் தமிழில், இன்று, வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளை பாருங்கள்:
விவசாயிகளுடன் நடைபெற்ற 7வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு யார் காரணம், என்ன காரணம்?
மத்திய அரசின் பிடிவாதமும் தன் தவறை ஒப்புக் கொள்ளவே கொள்ளாத அகந்தையுமே காரணங்கள்
"உழவினார் கைம்மடங்கின் இல்லை வாழ்வதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை" என்பதை விரைவில் அரசு உணரும். வேளாண் குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது. வேளாண் குடி மக்களே வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Former Union Minister and senior Congress leader P. Chidambaram has blamed the government's stubbornness and arrogance for failing to negotiate with the farmers.