இப்படியே போச்சுன்னா 30 லட்சம் கொரோனா பாதிப்பை இந்தியா சந்திக்கும்.. ப.சிதம்பரம்
சென்னை: இப்படியே நிலவரம் தொடர்ந்தால், கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை தாண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு நிலவரத்தை அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, ப.சிதம்பரம் இன்று தொடர் ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார். அதில் ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:
நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 15,83,792 ஆக உள்ளது, இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 9.6 லட்சம் பதிவாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில்... சேலத்தில் இருந்து 17.4 கிலோ வெள்ளி செங்கலை அனுப்பியது பாஜக, ஆர்எஸ்எஸ்!
இந்த கணிதம் எளிமையானது. ஆனால் பயமுறுத்துகிறது. இந்த விகிதத்தில் போனால், ஆகஸ்ட் இறுதிக்குள் இந்தியா 30 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றுநோய்களைப் பதிவு செய்யும். இதே மாதிரி தினசரி விகிதம் அதிகரித்தால், ஆகஸ்ட் இறுதிக்குள் 33 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுநோய்களையும், 2020ம் ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் 55 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுநோய்களையும் பதிவு செய்யும்.
கடவுள் தடைசெய்தாலும், கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் இந்தியா உலக நாடுகளில் முதல் இடத்தைப் பிடிக்க கூடும். பிரதமர் தனது கைகளில் அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கிறார். கொரோனா தடுப்பு ஒரு முழு தோல்வி. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.