ரஜினிகாந்த் அறிவித்த முடிவினை அவருடைய நலம்விரும்பி என்ற முறையில் வரவேற்கிறேன்: ப.சிதம்பரம்
சென்னை: அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்த முடிவை அவரது நலம் விரும்பி என்ற முறையில் தாம் வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
என்னுடைய இனிய நண்பர் திரு ரஜினிகாந்த் அவர்கள் நேற்று அறிவித்த முடிவினை அவருடைய நலம்விரும்பி என்ற முறையில் நான் வரவேற்கிறேன்.
திரு ரஜினிகாந்த் அவர்கள் ஒரு தார்மீக சக்தியாக விளங்கியவர், விளங்குபவர், விளங்குவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. 1996ஆம் ஆண்டைப் பல முறை நினைத்துப் பார்த்து நான் மகிழ்ச்சியடைபவன்.
2021ஆண்டையும் அதற்குப் பிறகு 2024ஆம் ஆண்டையும் நான் எதிர் நோக்குகிறேன். அவற்றில் திரு ரஜினிகாந்த் அவர்களுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல்
திரு ரஜினிகாந்த் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்க!
இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.