சசிகலா.. ஜெயலலிதா முன்பே பெயர் சொல்லிக் கூப்பிட்ட துணிச்சல்காரர் பி.எச். பாண்டியன்!
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவிடம் பி எச் பாண்டியன் பேசும்போது சசிகலாவின் பெயரை கூறியே தைரியமாக பேசுவார்.
ஜெயலலிதாவை அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரை அம்மா என அன்போடு அழைப்பர். அது போல் அவரது தோழியான சசிகலாவை சின்னம்மா என அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சசிகலா தோழி என்றாலும் கூட அவரிடம் சசிகலா குறித்து பேசும் மூத்த தலைவர்களும், மூத்த நிர்வாகிகளும் சின்னம்மா என குறிப்பிட்டே பேசி வந்தனர்.
ஆனால் தற்போது மறைந்த பி எச் பாண்டியனோ ஜெயலலிதாவிடம் சசிகலா குறித்து பேசினால் சசிகலா என குறிப்பிட்டே பேசி வந்தார். அந்தளவுக்கு பி எச் பாண்டியனின் தைரியம் இருந்தது.
ஜெ. மரணத்தில் மர்மம்.. சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும்.. புயலை கிளப்பிய பி எச் பாண்டியன்
அத்துடன் பி எச் பாண்டியன் மீது ஜெயலலிதாவுக்கு மரியாதை உண்டு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அந்த தைரியமும் துணிச்சலும்தான் ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் கூட சசிகலாவை எதிர்க்க காரணமாயிற்று.