மக்கள் நீதி மய்யத்தில் பழ கருப்பையா.. தேர்தலில் போட்டியிடுகிறார்.. கமல் அறிவிப்பு
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா இணைந்துள்ளார் என்றும் அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் இப்போது வரை நான்தான் முதல்வர் வேட்பாளர் என தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதாக நினைத்திருந்த நிலையில் இன்னும் 36 நாட்களே உள்ளன.
முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து வெற்றி வேட்பாளராக போட்டியிடுகிறார். சட்ட பஞ்சாயத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து களம் காண்கிறது.
மார்ச் 1ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் குறித்த நேர்காணல் நடைபெறும். மார்ச் 3ஆம் தேதி முதல் நான் பிரச்சாரம் செய்யபவுள்ளேன். மார்ச் 7-ஆம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
மூன்றாவது அணி குறித்த கேட்கிறீர்கள். நீங்கள் கூறுவது சரித்திரம் நான் கூறுவது மாற்றம். சக்கர நாற்காலி பற்றி நான் பேசியது என்னை பற்றி கருணாநிதியை பற்றி நான் கூறவில்லை. இப்போது வரை நான்தான் முதல்வர் வேட்பாளர். காங்கிரஸ் கட்சியிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பத்திரிகைகளில் அழைத்துள்ளார்கள் என்றார் கமல்ஹாசன்.