பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் மரணம்.. 2 தவணை தடுப்பூசி போட்டவர்!
சென்னை: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் இன்று அகால மரணம் அடைந்தார்.
வாக்கு எண்ணிக்கையின் போது பணியில் இருந்த அவர் கொரோனா தொற்றால் கடந்த ஐந்தாம் தேதி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தார். 13ம் தேதியான இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையராக இருந்தவர் ஈஸ்வரன். சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம்
இதனையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வந்த உதவி ஆணையர் ஈஸ்வரன் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த உதவி ஆணையர் ஈஸ்வரன் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையில் தற்போது வரை சென்னை மாநகர காவல்துறையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது, காவல்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது