பேனர் துயரம்.. கட்சிகள் திருந்தாது.. தேவை நிரந்தர தடை.. கடிவாளத்தை கையில் எடுக்குமா கோர்ட்?
Recommended Video
சென்னை: சுபஸ்ரீ இறந்த வழக்கில் நீதிமன்றம் சாட்டையை சுழற்றிய உடன்அனைத்து கட்சி தலைமைகளும் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளன.
ஆனால் உண்மையில் சில காலம் தான் இந்த உத்தரவுகள் மதிக்கப்படும் பின்னர் பழைய குருடி கதவை திறடி என்றபாணியில் மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள். எனவே பேனர் வைப்பதற்கு நிரந்தர தடை விதிப்பது தான் சிறந்த தீர்வாக இருக்கும். அதை கோர்ட் செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்று உயர்நீதிமன்றம் விவாகரத்து தவிர கல்யாணம் காதுகுத்து , கிடா வெட்டு என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கும் கலாச்சாரம் பெருகிவிட்டதாக கருத்து தெரிவித்து இருந்தது. இது உண்மை தான் எதற்கு எடுத்தாலும் பேனர் வைப்பது என்பது தமிழகத்தின் கலாச்சாரங்களில் ஒன்றாக மாறிகிடக்கிறது. அதுவும் திருமண வாழ்த்து தொடங்கி கண்ணீர் அஞ்சலி வரை அனைத்து பேனர்களையும் சர்வ சாதாரணமாக இன்று சாலைகளில் காண முடியும்.

கடமை முடிந்தது
குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்களின் வருகையின் போது மிகஅதிக அளவில் வாழ்த்து பேனர்களை காண முடியும். அப்படி வைக்கப்பட்ட ஒரு பேனரால் தான் சுபஸ்ரீ உயிரிழந்தார். உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய உடன் மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க கூடாது என்று கட்சிகள் அறிக்கைவிட்டு தங்கள் கடமையை முடித்துக் கொண்டுள்ளன.

அதிகாரிகள் தடுப்பதில்லை
ஆனால் மீண்டும் பேனர்கள் வைக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சட்ட விரோத பேனர்களை தடுப்பதற்கு போதிய சட்டங்கள் இருந்தாலும் உயர்நீதிமன்றம் கேட்டது போல் அந்த பேனர்களில் உள்ள வண்ணங்கள் அதிகாரிகளை தடுக்கிறதா என்று தெரியவில்லை.

இப்போது சுபஸ்ரீ சாவு
பேனர் என்பது அரசியலில் இருப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விளம்பரம் செய்து கொள்ளும் சிறந்த கருவியாக மாறிக்கிடக்கிறது. இப்படி விளம்பரத்தை விரும்பியவர்களால் தான் கோவையில் கடந்த ஆண்டு ரகு என்பவரும் இப்போது சுபஸ்ரீயும் உயிரிழந்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க முடியவில்லை
சட்ட விரோத பேனர் வழக்கில் நீதிமன்றம் பல முறை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவிலலை என்பதே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. இப்போதைக்கு பிரச்னை குறைவதற்காக பெயரளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஆனால் உண்மையில் சரியான நடவடிக்கை என்பது பேனர் வைப்பதற்கே நிரந்தர தடை விதிப்பது தான் சிறந்த தீர்வாக இருக்கும்.
கட்சிகள் எப்போதுமே திருந்தாது.. கோர்ட்தான் கடிவாளத்தை கையில் எடுக்க வேண்டும். இது மக்களின் எதிர்பார்ப்பு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications