திமுக மீதும், ஸ்டாலின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை... தமிழிசை சொல்கிறார்
Recommended Video
சென்னை: டிடிவி தினகரனும், திமுகவும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், என்னுடைய பிரசாரம் தமிழக இடைத்தேர்தலிலும் இருக்கும், வடநாட்டு தேர்தலிலும் இருக்கும் என்றார். தமிழகத்தில் அரசியல் ஸ்திரத் தன்மையற்ற நிலையை ஏற்படுத்தும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டு வருவதாகவும் தமிழிசை குற்றஞ்சாட்டினார்.
மேலும், தினகரன், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் பதற்றத்தோடு உள்ளனர். நாங்கள் வெளிப்படையாக கூட்டணி அமைத்துள்ளோம். ஆனால் தினகரன் திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார்.
உளவுத்துறை மூலம் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என செய்தி வந்துள்ளதாக ஸ்டாலின் சொல்வது, முற்றிலும் தவறு. எங்கள் உளவுத்துறை கருத்துபடி நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் தமிழிசை கூறினார்.
அரவக்குறிச்சி.. ஆளில்லாமல் தவிக்கும் அமமுக.. பணமிருந்தும் 10 பேர் கூட இல்லையாம்!
மக்கள் ஸ்டாலின் மீதும், திமுக மீதும் தான் நம்பிக்கையில்லாமல் உள்ளனர். அதனால் தான் தூத்துக்குடியில் வாக்கிங் எல்லாம் செல்கிறார். நிச்சயம் கனிமொழி தூத்துக்குடியில் வெற்றி பெறப்போவதில்லை, திமுகவும் வெற்றி பெறப்போவதில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.