சென்னைக்குள் வெளிமாவட்ட மக்கள் இரவு 10 மணிக்கு மேல் வர தடை விதிப்பு
சென்னை: சென்னைக்குள் வெளிமாவட்ட மக்கள் இரவு 10 மணிக்கு மேல் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலானது கரையை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த புயல் மரக்காணம் அருகே இன்று அதிகாலை கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
கடலூரில் இருந்து 90 கிமீ தூரத்தில் நிவர் புயல் உள்ளது. சென்னைக்கு 160 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனால் கடலூர், மரக்காணம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கனமழையும் சூறைக்காற்றும் வீசி வருகிறது.
நிவருக்கு நடுவே.. காரை எடுத்துக்கொண்டு.. சாரை சாரையாக பாலங்களுக்கு போன சென்னை மக்கள்.. என்னாச்சு?
தமிழகம்- புதுவை இடையே எல்லைகள் மூடப்பட்டுவிட்டன. அது போல் சென்னைக்குள் வெளிமாவட்ட மக்கள் இரவு 10 மணிக்கு மேல் வர தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தனியார் ஆலைகளில் பணிக்கு சென்றவர்கள் அவசர அவசரமாக வீட்டுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளும் இல்லாததால் அவர்கள் வீடு திரும்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.