என்னதான் கத்தினாலும்.. திருப்பூரில் இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்- துளி அச்சமும் இல்லை!
சென்னை: கொரோனா பரவுவதைத் தடுக்க வீட்டில் இருக்கத்தான் லாக்டவுன் அமலாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பொதுமக்கள் அலட்சியமாகவே இருப்பது தொடர்கிறது. திருப்பூரில் இன்று இறைச்சி வாங்க சில கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Recommended Video
நாடு முழுவதும் லாக்டவுன் என்பது 3 வாரங்களாக அமலில் இருக்கிறது. இன்று 19-வது நாளாக லாக்டவுன் நீடித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதக் கூடும் என்பதால் ஏற்கனவே பல மாவட்டங்களில் சனி, ஞாயிறுகளில் இந்த கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஈஸ்டர் பண்டிகை என்பதால் இன்று சில மணிநேரங்களுக்கு இறைச்சி கடை திறக்க அனுமதிக்கப்பட்டது.
திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் இன்று அதிகாலை முதல் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதினர். கொரோனாவின் உக்கிரத்தை கொஞ்சமும் உணராமல் ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் மீன் விற்பனை கடைகளிலும் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
தனிநபர் இடைவெளியை இந்த இடங்களில் மருந்துக்கு கூட பலர் பின்பற்றாதது வேதனைக்குரியதாகவும் இருந்தது. இதே திருப்பூரில் தொடக்கத்தில் போலீசார் கடும் கெடுபிடி காட்டினர். சில நாட்களாக கெடுபிடி குறைந்ததால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கவும் தொடங்கிவிட்டது.