சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

சிறுநீரக தொற்று, நீரிழிவு சிகிச்சைக்காக பேரறிவாளன் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள பேரறிவாளன்,சிறுநீரக தொற்று, நீரிழிவு சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் பரோலில் வந்துள்ளார். பரோல் ஒருவார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் அண்மையில் பரோலில் வந்தார். பரோல் விடுப்பில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன் தங்கியிருந்தார்.

Perarivalan was admitted to a private hospital in Viluppuram

இதனிடையே தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதம் ஒத்திவைத்துள்ள உச்ச நீதிமன்றம், கடந்த இரு தினங்களுக்கு முன் பேரறிவாளனுக்கு மேலும் ஒருவார காலம் பரோலை நீட்டித்தது. அத்துடன், பேரறிவாளனுக்கு சிகிச்சைக்கு செல்லும் போது அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை!அரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை!

இந்நிலையில் சிறுநீரகத் தொற்று மற்றும் நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கான சிகிச்சைக்காக விழுப்புரத்தில் மரகதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் ரவிச்சந்திரனிடம் இரண்டுநாட்கள் விழுப்புரத்தில் தங்கி சிகிச்சை பெறவுள்ளார்.

English summary
Perarivalan, who was released from jail on parole, has been admitted to Villupuram Private Hospital for treatment of kidney infection and diabetes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X