சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக அரசை அரியணையில் அமர்த்த உறுதி ஏற்போம் - எம்ஜிஆர் நினைவு நாளில் இபிஎஸ்,ஓபிஎஸ் அஞ்சலி

Google Oneindia Tamil News

சென்னை : எம்ஜிஆர் நினைவுநாளில் புரட்சித்தலைவர் காட்டியபாதையில் நடைபயின்று இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் வழிநடந்து அம்மாவின் அரசை மீண்டும் அரியணையில் அமர்த்த இந்நாளில் உறுதி ஏற்போம்

Periyar, MGR Death anniversary observed EPS, OPS Twitter post
என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தந்தை பெரியார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 33வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

உழைப்பின் உயர்வைப் போற்றிய தொழிலாளி. தமிழ் பயிர் செழிக்கச்செய்த விவசாயி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்.

சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவுநாளில் அவரை நினைவு கூர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அழியாப் புகழுடன் தமிழக மக்களின் மனதில் சரித்திரமாய் நிலை கொண்டு நிற்கும் பொன்மனச்செம்மல் தமிழகத்தின் உரிமைகளை காத்த காவல்காரன். உழைப்பின் உயர்வைப் போற்றிய தொழிலாளி. தமிழ் பயிர் செழிக்கச்செய்த விவசாயி தமிழக மக்களின் வாழ்வில் மாற்றமும் ஏற்றமும் தந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று பதிவிட்டுள்ளார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.

ஏழைகளின் இதயக்கனி, மறைந்தும் மறையாமல் சுடர்விடும் மாணிக்க பொன்னொளி மக்கள்திலகம் #MGR அவர்களின் நினைவுநாளில் புரட்சித்தலைவர் காட்டியபாதையில் நடைபயின்று இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் வழிநடந்து அம்மாவின் அரசை மீண்டும் அரியணையில் அமர்த்த இந்நாளில் உறுதி ஏற்போம்

English summary
Father Periyar Death Anniversary is observed today. Chief Minister Edappadi Palanisamy and O.Panneerselvam have paid tributes on his Twitter page to mark the 33rd anniversary of former chief minister and AIADMK founder MGR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X