ஊரடங்கில் தளர்வு.. பெட்ரோல், டீசல் விலையும் "தளர்வு".. சென்னையில் 34 நாட்களுக்கு பிறகு கிடுகிடு
சென்னை: சென்னையில் 34 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்துகள் முடங்கின. அப்போது பெட்ரோல், டீசல் விற்பனை மிகவும் குறைந்ததால் தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கவில்லை.
தற்போது பொது முடக்கம் அமலில் இருந்தாலும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வாகனங்கள் அதிக அளவில் ஓடுகின்றன. இந்த நிலையில் சென்னையில் 34 நாட்களுக்கு பெட்ரோல் விலை 53 பைசாவும் டீசல் விலை 52 பைசாவும் உயர்ந்துள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை.. இன்று கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிப்பு.. பலி எண்ணிக்கை கிடுகிடு
இந்த விலையுயர்வை அடுத்து பெட்ரோல் ரூ 75.54க்கும் டீசல் ரூ 68.22 க்கும் விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்ட நிலையில் தற்போது இந்த விலை உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்திவிட்டதாக கூறுகிறார்கள்.