தமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31
சென்னை: தமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ85.31-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் தமிழகத்தில் இன்று 9-வது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருந்தது.
பெட்ரோல் விலை கடந்த செப்டம்பர் 22 முதலும், டீசல் விலை அக்டோபர் 22-ந் தேதி முதல் மாற்றப்படாமலும் இருந்தது. கடந்த 8 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இன்று தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ரூ85.31-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ77.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments
English summary
Petrol, diesel prices go up today, 9th hike in last 9 days.
Story first published: Sunday, November 29, 2020, 8:02 [IST]