குருநாதா இதுக்கு ஒரு முடிவே கிடையாதா.. இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
அச்சே தின் என்று பிரதமர் மோடி வாராவாரம் பிரச்சாரம் செய்தாலும், இன்னும் எந்த நல்லதும் நாட்டிற்கு நடந்தது போல தெரியவில்லை. ஒரு பக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
இன்னோர் பக்கம் பெட்ரோல் டீசல் விலை மோசமான நிலையை அடைந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
[ காலம் கலி காலம் ஆகி போச்சுடா.. பொது இடத்தில் நெருக்கம்.. பதை பதைக்க வைக்கும் மாணவ ஜோடி! ]
கடந்த வார நிலை
கடந்த வாரம் முழுக்க பெட்ரோல் டீசல் விலை அதிகமாகவே இருந்தது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 11 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.92 காசுகளாக விற்றது. டீசல் லிட்டருக்கு ரூ. 79.51 காசுகளாக விற்றது.
இன்று விலை
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 20 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.99காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 79.71 காசுகளாக விற்கிறது.
தொடர்ந்து உயரும்
இந்த பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயரும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இது சர்வதேச சந்தையில் எதிரொலிப்பதால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசின் வரிக்கொள்கையும் இதற்கு காரணம் ஆகும்.
மும்பையில் என்ன விலை
அதேபோ மும்பையில் மிகவும் அதிகமாக பெட்ரோல் டீசல் விலை உள்ளது. அங்கு பெட்ரோல் 90.01 ரூபாய்க்கு விற்கிறது. டீசல் 81.06 ரூபாய்க்கு விற்கிறது. இந்தியாவில் அங்குதான் அதிக விலை விற்கிறது.