பெட்ரோல் விலை 52 காசுகள் உயர்வு... டீசல் விலை 63 காசுகள் அதிகரிப்பு
சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.39 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.25 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 52 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 63 காசுகள் அதிகரித்து விற்பனை
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.
கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது.
இந்தநிலையில்,நேற்று பேரலுக்கு 1.00 டாலர் குறைந்தது. கடந்த சில தினங்களாக உயர்ந்து வரும் கச்சா எண்ணெயின் விலை 51.59 டாலராக உள்ளது.
அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.39 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.25 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன