சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்... அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகள் அதிகரித்து விற்பனை.

Petrol, diesel prices on the rise again

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஏறுமுகத்தில் எரிப்பொருட்களின் விலை இருந்து வருகின்றன. இதன் காரணமாக, வாகன கட்டணங்கள் அதிகரிப்பதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக பெட்ரோல் விலை ஏறுமுகத்துடன் காணப்படுகிறது.

English summary
Petrol price was hiked by 10 paisa per litre, diesel by 7 a litre, according to price notification issued by state fuel retailers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X