அடடே ஆச்சரியம்.. 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமே இல்லை
சென்னை: 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை சாமானிய மக்களை நினைத்தாலே பேரதிர்ச்சிதான் என்கிற நிலைமை உள்ளது. சுமார் 15 ஆண்டுகாலம் மாதத்துக்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வந்தனர்.
பின்னர் எண்ணெய் நிறுவனங்கள் கைகளுக்கு இந்த அதிகாரம் போனது. மேலும் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியும் அமைக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்திக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை கடும் ஏற்றத்தை எதிர்கொள்ளும்.
கொரோனா லாக்டவுன் காலத்திலும் கூட பெட்ரோல், டீசல் விலை விறுவிறுவென உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இன்று முதல் கிராமப்புறங்களில் வழிபாட்டு தலங்கள் முழுமையாக திறப்பு- ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்
இந்நிலையில் கடந்த 1 வார காலமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. இன்று 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாறவில்லை.
சென்னையில் பெட்ரோல் 1 லிட்டருக்கு ரூ 83.67 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ77.78 ஆக விற்பனை செய்யப்படுகிறது.