புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை: தமிழகத்தில் ஒரு லிட்டர் 90ஐ கடந்தது - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 90 கடந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சியில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ரூபாய் 90 ரூபாய் 53 பைசாவாகவும் கடலூரில் ரூ
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 90 கடந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 88 ரூபாய் 29 பைசாவாக விற்பனையாகும் நிலையில், காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சியில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக 90 ரூபாய் 53 பைசாவாகவும், கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 14 பைசாவாகவும் விற்பனையாகிறது.
சர்வதேச கட்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 1,375 ரூபாயாக வீழ்ச்சி அடைந்து, மே முதல், மீண்டும் உயரத் துவங்கியது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள மூன்று பொதுத் துறை நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
இன்று பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து, 22 காசுகள் அதிகரித்து சென்னையில் 88 ரூபாய் 29 பைசாவாகவும் டீசல் நேற்றைய விலையிலிருந்து 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 81 ரூபாய் 14 பைசாவாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 88 ரூபாய் 29 பைசாவாக விற்பனையாகும் நிலையில், காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சியில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக 90 ரூபாய் 53 பைசாவாகவும், கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 14 பைசாவாகவும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் சதம் அடித்து விடும் என்று வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.