சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காத ரஜினி.. அமைதியே முக்கியம் என பேட்டி!

தேர்தல் குறித்து கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்காமல், வாழ்க்கையில் அமைதியே முக்கியம் என்று பேட்டி அளித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் குறித்து கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்காமல், வாழ்க்கையில் அமைதியே முக்கியம் என்று பேட்டி அளித்து இருக்கிறார்.

பரமஹம்ச யோகானந்தர் குறித்த 'ஒரு யோகியின் சுயசரிதம்', ஒலி வடிவ புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இதில் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் அவர் இந்த விழாவில் பேசினார்.

நான் பனங்காட்டு நரி.. இதுபோன்ற சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்.. தெறிக்கவிடும் துரைமுருகன் நான் பனங்காட்டு நரி.. இதுபோன்ற சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்.. தெறிக்கவிடும் துரைமுருகன்

என்ன பேசினார்

என்ன பேசினார்

ரஜினிகாந்த் தனது பேச்சில், பரமஹம்ச யோகானந்தரின் கருத்துக்களை அனைவரும் பின்பற்றி, வாழ்வில் அமைதி பெற வேண்டும். அவரின் கருத்துக்களை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கை நன்மையை நோக்கி செல்லும். அனைவரும் நம்பிக்கையோடும், பக்தியோடும் புத்தகத்தில் இருப்பதை அப்படியே பின்பற்ற வேண்டும்.

கோபம் குறைய வேண்டும்

கோபம் குறைய வேண்டும்

மக்களின் வாழ்க்கையில் கோபம் குறைய வேண்டும். கோபம் குறைந்தால் வாழ்க்கையில் துன்பத்தின் தாக்கம் இருக்காது. மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அனைவரும் அப்போதுதான் ஒற்றுமையாக இருக்க முடியும். இந்த புத்தகம் மக்களின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றும் வல்லமை கொண்டது என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

பேட்டியளித்தார்

பேட்டியளித்தார்

இதையடுத்து விழா முடிந்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவரிடம் பல அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதே போல் தேர்தல் தொடர்பான கேள்விகளும் அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் எதற்கும் பதில் அளிக்கவில்லை.

என்ன கூறினார்

என்ன கூறினார்

அதற்கு பதிலாக ரஜினிகாந்த், பரமஹம்ச யோகானந்தரின் ஆடியோ புத்தகத்தை கேட்டு, அனைவரும் பயனடைய வேண்டும். அமைதிதான் முக்கியம். மக்கள் இந்த புத்தகத்தை படித்துவிட்டு அமைதியை நோக்கி செல்ல வேண்டு என்று கூறிவிட்டு காரில் ரஜினிகாந்த் ஏறி சென்றார்.

English summary
Please follow Ahimsa, Rajini Kanth answers for political questions in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X