பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது… காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட இந்த தேர்வு கடந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது.
இன்று தொடங்கும் பிளஸ் 1 தேர்வு வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
ஏற்கனவே தேர்ச்சி பெறாத 84 ஆயிரம் பேர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,914 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை ஆய்வு செய்ய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன .
பூவை நீ பூ மடல்... பூவுடல் தேன் கடல்.. போலீஸ் ஜோடியின் டிக் டாக் வீடியோவால் சலசலப்பு!
10 ,11, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பி அடிக்கும் மாணவர்களை பறக்கும்படையினர் கண்டுபிடித்தால், சம்பந்தப்பட்ட தேர்வு அறையின் கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.