Breaking News Live: அன்பான வணக்கம்.. நாளை நமதே.. நாற்பதும் நமதே.. பிரதமர் மோடி
இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரே நாளில் நான்கு இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
தேனி: அன்பான வணக்கம் என்று தமிழில் பேசி பிரதமர் மோடி தனது பேச்சை தொடங்கினார். மேலும் நாளை நமதே, நாற்பதும் நமதே என கூறி மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இங்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஆதரித்து பேசுகிறார்.
இதற்காக அவர் நேற்று இரவே தமிழகம் வந்துள்ளார். ஆண்டிப்பட்டியில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரடியாக கண்காணித்து வருகிறார்.
அதுபோல் ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனையும் ஆதரித்து பேசுகிறார். பிரதமரின் பொதுக் கூட்டத்தையொட்டி இரு இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் திமுக- காங். கூட்டணிக்கு என்னை பிடிக்கவில்லை
ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும் வளமுடனும் வாழ வேண்டும்
புதிய இந்தியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்
கோடிக்கணக்கான மக்களின் கருத்துகளை கேட்டறிந்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு
காங்கிரஸ் கட்சி ஏழ்மை மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்போகிறது
காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து தமிழகத்தில் வறுமையை ஒழிப்போம்
சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு
LIVE: CP @RahulGandhi addresses public meeting in Salem, Tamil Nadu. #NammaThalaivarRahulGandhi https://t.co/BaR2k8Ylvs
— Congress (@INCIndia) April 12, 2019
ஆனால் அவரால் தமிழக மக்களை கட்டுப்படுத்தவே முடியாது - ராகுல் காந்தி
தமிழக மக்களை யாராலும், எப்போதும் கட்டுப்படுத்த முடியாது - ராகுல் காந்தி
யாரும், எங்கிருந்தும் தமிழர்களை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் காந்தி
தமிழர்கள் நினைத்தால்தான் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முடியும் - ராகுல் காந்தி
இங்கு பல மொழி, மதம், கலாச்சாரம் இருக்கிறது - ராகுல் காந்தி
பல வேறுபாடுகள் சேர்ந்ததுதான் இந்தியா- ராகுல் காந்தி
அதனால்தான் தமிழகத்தின் கலாச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது - ராகுல் காந்தி
தமிழர்களின் குரலை புறக்கணித்து வருகிறார்கள் - ராகுல் காந்தி
தமிழர்களின் குரலை புறக்கணிப்பது சரியான இந்தியாவாக இருக்க முடியாது - ராகுல் காந்தி