சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்கள் சொன்னதை எல்லாம் செய்ய தமிழர்கள் என்ன அதிமுக கட்சியா? மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

அதிமுகவை கட்டுப்படுத்துவது போல மோடி தமிழக மக்களை கட்டுப்படுத்த நினைக்கிறார், ஆனால் அவரால் தமிழர்களை கட்டுப்படுத்த முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை கட்டுப்படுத்துவது போல மோடி தமிழக மக்களை கட்டுப்படுத்த நினைக்கிறார், ஆனால் அவரால் தமிழர்களை கட்டுப்படுத்த முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரே நாளில் இன்று நான்கு இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

அதன் ஒருகட்டமாக அவர் கிருஷ்ணகிரியில் பேசினார். அதில் தமிழர்களின் பெருமை குறித்து அவர் பேசினார்.

கோடை விடுமுறைக்கு ஊருக்கு போகாதீங்க... ஓட்டு போடுங்க ப்ளீஸ்... கட்சியினர் கெஞ்சல்கோடை விடுமுறைக்கு ஊருக்கு போகாதீங்க... ஓட்டு போடுங்க ப்ளீஸ்... கட்சியினர் கெஞ்சல்

என்ன பேச்சு

என்ன பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரியில் பேசும் போது, தமிழர்களின் குரல் மத்தியில் ஒலிக்க வேண்டும். இந்தியா பல பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு பல மொழி, மதம், கலாச்சாரம் இருக்கிறது. பல வேறுபாடுகள் சேர்ந்ததுதான் இந்தியா. அதனால்தான் தமிழகத்தின் கலாச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழர் குரல்

தமிழர் குரல்

தமிழர்களின் குரலை புறக்கணித்து வருகிறார்கள். தமிழர்களின் குரலை புறக்கணிப்பது சரியான இந்தியாவாக இருக்க முடியாது. அனைத்து கலாச்சாரத்தையும் நாம் மதிக்க வேண்டும். திமுக, காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் எல்லாம் அதனால்தான் மோடியை எதிர்க்கிறோம்.

மோடி எப்படி

மோடி எப்படி

மோடி ஒரே சிந்தனையையே நாடு முழுக்க திணிக்க நினைக்கிறார். அவருக்கு நாட்டின் பன்முகத்தன்மை புரியவில்லை. அதிமுகவை கட்டுப்படுத்துவது போல மக்களை கட்டுப்படுத்த நினைக்கிறார். ஆனால் அவரால் தமிழக மக்களை கட்டுப்படுத்தவே முடியாது. தமிழக மக்களை யாராலும், எப்போதும் கட்டுப்படுத்த முடியாது.

தமிழர்கள் எப்படி

தமிழர்கள் எப்படி

யாரும், எங்கிருந்தும் தமிழர்களை கட்டுப்படுத்த முடியாது. தமிழர்கள் நினைத்தால்தான் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முடியும். தமிழர்களை அன்பால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மோடியின் வெறுப்பரசியலால் தமிழர்களை கட்டுப்படுத்த முடியும். மோடி கொஞ்சம் தமிழர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

English summary
PM Modi wants to control Tamilians just like he controls AIADMK says Congress chief Rahul Gandhi .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X