என்ன ஆச்சு அன்புமணி ராமதாசுக்கு?.. ஏன் இப்படி எல்லாம் பேச ஆரம்பித்து இருக்கிறார்
பூத் கமிட்டி குறித்த அன்புமணி ராமதாஸ் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
Recommended Video
சென்னை: அன்புமணி ராமதாசுக்கு என்ன ஆச்சு.. ஏன் இப்படி எல்லாம் பேச ஆரம்பித்து இருக்கிறார் என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை எழுப்பி உள்ளது!
கூட்டணி மூலம் கிடைத்துள்ள 7 தொகுதிகளில் தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பிரச்சாரத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் அன்புமணி!
அதாவது,"இந்த தேர்தலில் என்ன நடக்கும் தெரியுமா? பூத்தில் யார் இருப்பா? நம்மதான் இருப்போம். சொல்றது புரியுதா.. இல்லையா?... யார் வெற்றி பெறப்போறாங்கன்னு சொல்லனுமா வெளியில்" என்று பேசியதுதான் இன்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
வேட்டியை மடிச்சு கட்டிட்டு பொள்ளாச்சிக்கு வந்திருக்க வேண்டாமா.. கரு . பழனியப்பன் பாய்ச்சல்
கண்ணியம்
இவ்வளவு காலம் அரசியலில் இருந்து வரும் அன்புமணி, இப்படியெல்லாம் பேசியதே கிடையாது. எப்போது பேசினாலும் சரி, வார்த்தைகளில் ஒரு கண்ணியம் இருக்கும்! யாரையுமே அவமதித்தோ, தரக்குறைவாகவோ பேசியதில்லை.
திமுக புகார்
எத்தனையோ முறை பாமக அபார வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, ஒரே ஒரு இடத்தில் மட்டும் வென்றும் உள்ளது. அப்போதெல்லாம் பேசாத அன்புமணி, இப்போது பூத்துகளை கைப்பற்றும் நோக்கில் பேசியது ஏன் என தெரியவில்லை. இது குறித்து திமுக ஒரு பக்கம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது என்றாலும், அன்புமணியின் மீதும் கேஸ் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
உணர்ச்சிகள்
அதிமுக ஒதுக்கிய சீட்டுகளில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பது போல ஒருசில தொகுதிகளும் உள்ளன. இந்த பயம் காரணமாகத்தான் அன்புமணி இப்படி பேசினாரா? அல்லது, தொண்டர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதன்மூலம் களத்தை சூடாக்கி ஓட்டு வேட்டையை ஆரம்பிக்கலாம் என யோசித்திருக்கிறாரா என தெரியவில்லை.
மீம்ஸ்கள்
ஆனால் இரு தினங்களாக அன்புமணி பொதுமக்களின் கடுமையான அதிருப்தியை சம்பாதித்து வருகிறார். இது சோஷியல் மீடியாவில் அதிகமாகவே வெளிப்படுகிறது.
|
நல்லா புரியுது
"பூத்ல நம்மதான் இருப்போம்.... நம்மதான் இருப்போம்... என்ன புரியுதா..." - அன்புமணி. ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது... மக்கள்கிட்ட நேர்மையா ஓட்டு வாங்கி ஜெயிக்க உங்களுக்கு துப்பு இல்லைனு" என்று ஒரு பதிவு சொல்கிறது.
நிர்ப்பந்தம்
'ஓட்டு வங்கி வச்சிருக்கிற நீங்க... ஏன், அதிமுகவிடம் கடன் வாங்கினீங்க, டாக்டர்' என்கிறது மற்றொரு பதிவு. இதுபோல நிறைய மீம்ஸ்களும் வர ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே அதிமுக - பாஜகவுடன் ஏன் கூட்டணி என்பதற்கு அன்புமணி ஒரு நீண்ட விளக்கத்தினை பிரச்சாரங்களில் தர வேண்டி உள்ளது. இப்போது பூத் கமிட்டி பற்றியும் விளக்கம் சொல்ல வேண்டிய நிலைமைக்கு அன்புமணி ஆளாகி இருக்கிறார்.