திண்டிவனம்-திருச்சி இடையே 8 வழிச்சாலை வேண்டும்... ராமதாஸ் புதிய கோரிக்கை
சென்னை: சேலம் -சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகி அது கிடப்பில் உள்ள நிலையில், திண்டிவனம்-திருச்சி இடையே 8 வழிச்சாலை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸின் கோரிக்கைக்கு ஒரு புறம் வரவேற்பு இருந்தாலும், திண்டிவனம்-திருச்சி இடையே சாலையோரம் நிலம் வைத்திருப்பவர்கள் சற்று அதிர்ச்சியோடு தான் இந்த விவகாரத்தை பார்க்கின்றனர்.
நீட் தேர்விலிருந்து விலக்கு.. பிரதமரை சந்தித்து ஸ்டாலினின் கடிதத்தை அளித்த திமுக எம்பிக்கள்
அதிவேக சாலை
தமிழகத்தில் சாலைவழி பயண நேரத்தை குறைக்கும் வகையில், முதற்கட்டமாக சேலம் சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அது விளைநிலங்கள் வழியே அமைக்கப்பட இருந்ததால் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த திட்டம் இப்போது தொங்கலில் உள்ளது.
திருச்சி-திண்டிவனம்
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், திருச்சி-திண்டிவனம் இடைடே 8 வழிச்சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். திண்டிவனம்- திருச்சி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
இணைப்பு பாதை
சென்னை -திருச்சி சாலை என்பது வடமாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் உயிர்நாடிப் பாதை என தெரிவித்துள்ளார் ராமதாஸ். எனவே, திண்டிவனம் திருச்சி சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி
பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்துள்ள கோரிக்கை நியாயமானது என்றாலும் கூட, திண்டிவனம் -திருச்சி இடையே சாலையோரம் நிலம் வைத்திருப்பவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருவேளை திருச்சி வரை 8 வழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டால் தங்கள் நிலம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் இப்போதே அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.