ராத்திரி நேரம்... பெட்ரூமூக்குள் திமுதிமுன்னு ஒரே கூட்டம்.. பாய்ந்து வந்த போலீஸ்.. மொத்தம் 7 பேர்!
சென்னையில் விபச்சாரம் செய்த ஒரு கும்பல் கைது செய்யப்பட்டது
சென்னை: நைட் நேரம் ஆனால், அந்த வீட்டிற்குள் ஆண்கள், பெண்கள் என நடமாட்டம் அதிகமாகவே இருந்துள்ளது.. இதையடுத்துதான் நம் போலீசார் அதிரடியை காட்டினர்.
சென்னை தண்டையார்பேட்டையில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது.. அதுவும் நைட் நேரத்தில்தான் ஆண்கள் அதிகமாக வந்து போயுள்ளனர்.. அவர்கள் யாருமே அந்த ஏரியாவை சேர்ந்தவர்களும் இல்லை.
புது புது ஆட்கள், ஒரே வீட்டுக்கு இரவு நேரங்களில் வந்து போவதை அந்த பகுதி மக்கள் பார்த்து சந்தேகமடைடந்தனர்.. இதையடுத்து, அந்த வீட்டை தீவிரமாக கண்காணித்தபோதுதான் தெரிந்தது, பெண்களும் அதே வீட்டுக்கு வந்து போகிறார்கள் என்பது.
2 பேரும் நல்ல நெருக்கம்.. நடுவீட்டில் நின்று.. "அந்த" மாதிரி பாட்டுக்கள்தான்.. திடீரென வெடித்த சண்டை
தம்பதி
இதன்பிறகு, அவர்கள் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸில் புகார் தந்தனர்.. விரைந்து வந்த போலீசார் திடுதிப்பென்று சம்பந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.. அங்கே கணவன் மனைவி 2 பேரும் இருந்தனர்.. ஆனாலும் தனிப்படை போலீசார், வீட்டை சோதனையிட்டு, அந்த தம்பதியையும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
மழுப்பல்
ஆரம்பத்தில் நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம், சொந்தக்காரர்கள்தான் வந்துபோனார்கள் என்று மழுப்பினாலும், இறுதியில் பாலியல் தொழில் நடத்துவதை ஒப்புக் கொண்டனர். அதன்பிறகு நடந்த சோதனையில், மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவர்கள் பெயர், மதன், செல்வி, சாஹிதா பானு, கார்த்தி, மகேஸ்வரி ஆகும்.
அதிர்ச்சி
எல்லாருமே இதே தொழிலை செய்பவர்கள்தான்.. இந்த கும்பல், விதவை பெண்கள், கணவனை இழந்த இளம்பெண்களை குறிவைத்து, பணத்தாசை காட்டி, இந்த தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.. இதில் மற்றொரு அதிர்ச்சி தகவல், இவர்கள் சிறுமிகளையும் விட்டுவைக்கவில்லை.
குழந்தைகள்
காஸ்ட்லி டிரெஸ், செல்போன், பணத்தாசை காட்டி, அந்த குழந்தைகளையும் இதே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சம்பாதித்து வந்துள்ளதும் தெரியவந்தது. இப்போதைக்கு இந்த கும்பல் சிக்கியிருந்தாலும், வேறு இடங்களிலும் இதேபோல செயலில் ஈடுபட்டார்களா? என்ற விசாரணையும் நடக்கிறது