சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கதவைத் தட்டிய போலீஸ்.. நள்ளிரவில் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏ.ஆர். முருகதாஸ் வீட்டிற்கு சென்ற போலீஸ்... நள்ளிரவில் பரபரப்பு... வீடியோ

    சென்னை: நள்ளிரவில் வந்து போலீசார் தனது வீட்டு கதவை தட்டினார்கள் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

    சர்கார் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஆளும் கட்சியினருக்கு எதிராக சில காட்சிகள் இருப்பதாகவும், அரசு கொடுத்த இலவச பொருட்களை தீயிலிட்டு எரிப்பது போன்ற காட்சிகளை வைத்துள்ளதாகவும், அப்படத்தின் இயக்குனர் முருகதாஸுக்கு எதிராக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    Police bang my house door says, AR Murugadoss

    இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரி மாநிலம் தழுவிய அளவில் நேற்று அதிமுகவினர் போராட்டங்களை நடத்தினார்.

    படக்குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சண்முகம், மாநில தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் உடன் நேற்று திடீர் ஆலோசனை நடத்தியிருந்தார்.

    இந்த நிலையில்தான் நேற்று இரவு முருகதாசை கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த தகவலை முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். நள்ளிரவில் போலீசார் தனது வீட்டுக்கு வந்து கதவை பலமுறை தட்டியதாகவும், தான் வீட்டில் இல்லை என்பதால் அவர்கள் திரும்பி சென்று விட்டதாகவும், தற்போது தனது வீட்டுக்கு வெளியே போலீசார் இல்லை என்றும் அந்த டுவீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Police bang my house at late night, says Sarkar director A.R.Murugadoss in tweeter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X