சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகைகளுடன் ஜாலி.. வாழ்ந்திருக்கிறாரய்யா முருகன்.. ஊர் ஊராக கொள்ளை.. அது இருக்கும் ரூ. 100 கோடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    வாழ்ந்திருக்கிறாரய்யா முருகன்.. ஊர் ஊராக கொள்ளை.. அது இருக்கும் ரூ. 100 கோடி!

    சென்னை: முருகன் கொள்ளை அடித்த பணம் மட்டும் சுமார் ரூ.100 கோடி இருக்குமாம்.. இதில் ஏராளமான பணத்தை நடிகைகள், துணை நடிகைகளுக்கு தண்ணீராக செலவு செய்து செம ஜாலியாக இருந்துள்ளார்!

    லலிதா ஜூவல்லரி கொள்ளையின் முக்கிய குற்றவாளி முருகன். இவன் பெங்களூர் கோர்ட்டில் சரண் அடைந்ததையடுத்து, பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இப்போது நம் போலீசார் முருகனை தமிழகத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டதில் இதுவரை ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் முருகனிடம்தான் உள்ளது.

    "அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா.." மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை

    12 கிலோ நகைகள்

    12 கிலோ நகைகள்

    திருச்சி திருவரம்பூர் பூசை துறை காவேரி படுக்கை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ நகைகள் இப்போதைக்கு கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நகைகள் பெங்களூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு பின்பு திருச்சி கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகள் எங்கே இருக்கின்றன என்பது இனிமேல்தான் தெரியும். இதற்காக 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ஏகப்பட்ட வழக்குகள்

    ஏகப்பட்ட வழக்குகள்

    நாடு முழுவதும் 5 வருஷத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளான் முருகன். ஆனால், ஒரு சில வழக்குகளில் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டுள்ளனராம். மீதமுள்ள நகைகளை பற்றி மூச்சு கூட விடக்காணோம். முருகன் வாயில் உண்மையை வரவழைப்பது அவ்வளவு கஷ்டமான விஷயமாம். ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு போலீசாருக்கே தண்ணி காட்டி வந்துள்ளான்.

    பினாமி சொத்து

    பினாமி சொத்து

    எப்படியும் 100 கோடி ரூபாய் கொள்ளை அடித்து வைத்திருப்பான் என்கிறார்கள். ஏனென்றால் கொள்ளையடித்தது முழுக்க கோடீஸ்வர வீடுகள், பேங்குகள்தான்! இதில் பல சொத்துக்களை தன்னுடைய சொந்தக்காரர் பெயரில், பினாமி பெயரில் முருகன் பதுக்கி இருப்பதாக தெரிகிறது.

    நடிகைகள்

    நடிகைகள்

    இதுபோக, இந்த திருட்டு பணத்தில் சினிமா எடுக்கிறேன் என்று சொல்லிகொண்டு பணத்தை கொண்டு போய் தன் படக்கம்பெனியில் கொட்டி உள்ளான் முருகன். நடிகைகள், துணை நடிகைகளுக்கு பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளான். கொள்ளை அடித்த பணம் சுமார் ரூ.100 கோடி, 2 சொகுசு கார்கள் இதெல்லாம் எங்கே இருக்கிறது, என்பதை இனிமேல்தான் நம் போலீசார் விசாரிப்பார்கள்.

    English summary
    trichy police have recovered 12 kg gold from gang leader murugan and serious investigation is going on him
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X