ரியாமிகா தற்கொலைக்கு இந்த 3 பிரச்சினைகள்தான் காரணம்?.. போலீஸார் விசாரணை
Recommended Video
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் நடிகை ரியாமிகா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தம்பி மற்றும் காதலனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தைச் சேர்ந்தவர் ரியாமிகா (20). இவர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ் மற்றும் அகோரி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவரது தம்பி பிரகாஷுடன்தான் இவர் வசித்து வந்தார்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை வளசரவாக்கம் போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடிதம்
நடிகை ரியாமிகாவுக்கு படவாய்ப்பு இல்லாததால் அவர் கடந்த சில மாதங்களாக வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. ரியாமிகாவின் அறையை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அங்கு தற்கொலைக்கான கடிதம் ஏதும் கிடைக்கவில்லை.
பேச்சு
அவரது செல்போனில் உள்ள வீடியோக்கள், ஆடியோக்கள் ஆகியவற்றை விசாரித்து வருகின்றனர். அவர் கடைசியில் யாருடன் பேசினார் என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது. ரியாமிகாவின் தம்பிக்கு நிரந்தர வேலை ஏதும் இல்லாததால் பொருளாதார நெருக்கடியே அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அனைத்து கோணங்கள்
ரியாமிகாவிடம் பிரகாஷ் தகராறு செய்துள்ளார். மேலும் இவரது காதலன் தினேஷ் ரியாமிகாவிடம் சரியாக பேசுவதில்லை என கூறப்படுகிறது. எனவே அனைத்து கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி பிரகாஷ் மற்றும் காதலன் தினேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றர்.