காலையிலேயே என்னா கூட்டம்.. சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே ஐபிஎல் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
சென்னை: ஐபிஎல் டிக்கெட் வாங்க ஏற்பட்ட ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.
ஐபிஎல் போட்டித் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. டேபிளில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாப் அணியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். போட்டியை நேரில் காண சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
நேற்றைய த்ரில் போட்டியில், ஹைதராபாத் அணியை, சென்னை தோற்கடித்தது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்துள்ளது. அடுத்ததாக, ஏப்ரல் 26ம் தேதி மும்பை அணிக்கு எதிராகவும், மே 1ம் தேதி டெல்லி அணிக்கு எதிராகவும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே பங்கேற்கும், கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஓட்டு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 உயர்த்த பிரதமர் மோடி திட்டம்.. காங். புகார்
இதையடுத்து இன்று காலை சேப்பாக்கம் மைதானத்தின் முன்பாக நீண்ட கியூவில் ரசிகர்கள் நின்று டிக்கெட் பெற முயற்சித்தனர். ஒரே நேரத்தில் அனைவரும் கவுண்டரை நோக்கி விரைந்ததால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதை பார்த்த போலீசார், லேசான தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.