சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..மாநிலம் முழுவதும் வாக்கும் எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Counting 2019: லோக்சபா தேர்தல் திருவிழா..இன்று வாக்கு எண்ணிக்கை!

    சென்னை: வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாடாளுமன்றத்துக்கான 17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தல் கடந்த 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

    Police protection tightened in the state due to vote count

    இதேபோல் தமிழகத்திலும் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதியும் எஞ்சிய 4 தொகுதிகளுக்கு கடந்த 19 ஆம் தேதியும் நடைபெற்றது.

    இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    2 லெட்டர்.. ஒரு புதிய பெயர்.. ஆட்சி அமைக்க காங். வகுத்த 3 பிளான்கள்.. இன்றே செயல்படுத்த திட்டம்! 2 லெட்டர்.. ஒரு புதிய பெயர்.. ஆட்சி அமைக்க காங். வகுத்த 3 பிளான்கள்.. இன்றே செயல்படுத்த திட்டம்!

    சென்னை உட்பட அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 5000 போலீசாரும், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    Police protection tightened in the state due to vote count.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X