பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு.. சென்னை டாப்
சென்னை: தடையை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் காலை ஒரு மணி நேரமும் இரவு ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருந்தது.
ஆனால் மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக கூறி, பல்வேறு ஊர்களில் காவல்துறையினர் நூற்றுக்கணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக 343 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
தஞ்சை 17, தேனி 2, திருச்சி 64, திருவாரூர் 31, விருதுநகர் 134, ராமநாதபுரம் 26, நாகை 27, மதுரை 109, நீலகிரி 15, கடலூர் 29, நாமக்கல் 46, கோவையில் 184 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தடையை மீறி பட்டாசு வெடித்ததாக தருமபுரி 25, வேலூர் 50, நெல்லை 31, தூத்துக்குடி 30, குமரி மாவட்டத்தில் 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.