சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மல்லிகாவுக்கு சிக்னல் கிடைக்கவில்லை.. விரைந்து வந்தான் "காவலன்".. மக்கள் அப்ளாஸை அள்ளும் SOS ஆப்!

காவலன் செயலி மூலம் பெண்ணை சென்னை போலீஸ் மீட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஓட்டல் பாத்ரூமில் மல்லிகா என்ற பெண் சிக்கி கொண்டார்.. யாரையும் கூப்பிட்டு சொல்லவும் முடியவில்லை.. செல்போனிலும் சிக்னல் இல்லை.. ஆனாலும் வெளியே பத்திரமாக வந்தார்.. எப்படி?

காவலன் ஆப் ...

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக போலீசார் காவலன் SOS" என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.. நைட் நேரத்தில் பாதுகாப்பற்ற சூழலை உணரும் பெண், இந்த ஆப்பில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தினால் போதும்.

நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்ற தகவல் ஜிபிஎஸ் மூலம் கன்ட்ரோல் ரூமுக்கு போய்விடும்.. அடுத்த சில செகண்ட்டுகளில் போலீசாரின் ரோந்து வண்டி வந்து அங்கேநின்றுவிடும். இந்த SOS பட்டனை அழுத்தும்போது, செல்போனில் உள்ள கேமரா ஆட்டோமேட்டிக்காக 15 விநாடிகளில் வீடியோ எடுத்து அதையும் கன்ட்ரோல் ரூமுக்கு அனுப்பி விடும்.

இவர் யார்.. கையில் ஊசியுடன் திரிகிறாரே.. ரோடு ரோடாக சுற்றி திரியும் நபர்.. கலக்கத்தில் பொதுமக்கள்!இவர் யார்.. கையில் ஊசியுடன் திரிகிறாரே.. ரோடு ரோடாக சுற்றி திரியும் நபர்.. கலக்கத்தில் பொதுமக்கள்!

 மொழி பிரச்சனை

மொழி பிரச்சனை

செல்போன் சிக்னல் இல்லை என்றாலும் பரவாயில்லை.. மெசேஜ் தானாகவே போய்விடும்.. தமிழ், இங்கிலீஷ் என 2 மொழிகளும் இதில் உண்டு.. அதனால் மொழிப்பிரச்சனை யாருக்கும் கிடையாது.. இந்த ஆப்பில் Registration பக்கத்தில் பெயர், செல்போன் நம்பரை பதிவு செய்து, அடுத்த பக்கத்தில் அட்ரஸ் , இ-மெயில் அட்ரஸ் குறித்தால் போதும்.. உங்களுக்கு காவலன் ஆப் ரெடியாகிவிடும்.. ரொம்ப சிம்பிள்!!

 டவுன்லோடு

டவுன்லோடு

பெண்களின் அவசர உதவிக்காக இது அறிமுகமாகி உள்ளதால், பல பெண்கள், குழந்தைகள் இதனை டவுன்லோடு செய்து வைத்து கொண்டு வருகின்றனர்.. இப்பவே 10 லட்சம் பேரையும் தாண்டி இதை டவுன்லோடு செய்துள்ளனராம்.. ஆனால் விளையாட்டுத்தனமாக யாரும் இதை பயன்படுத்த வேண்டாம் என்று போலீசார் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

 மல்லிகா

மல்லிகா

இந்த காவலன் ஆப்பைதான் மல்லிகா என்ற பெண்ணும் டவுன்லோடு செய்து வைத்துள்ளார்.. இவர் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்.. நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல் பாத்ரூமில் எதேச்சையாக சிக்கி கொண்டார்... அந்த கதவு திடீரென திறக்கவில்லை.. சுமார் 20 நிமிடங்கள் பாத்ரூமுக்குளேயே மாட்டிக் கொண்டுள்ளார்.. அந்த ஹோட்டல் ஊழியர்களை தொடர்புகொள்ள முடியவும் இல்லை..

செல்போன்

செல்போன்

தன்னுடைய செல்போனில் கூப்பிடலாம் என்றால் சிக்னலும் இல்லை. அப்போதுதான் அவருக்கு காவலன் நினைவுக்கு வந்தான்... அதில் இருந்த ரெட் கலர் பட்டனை அழுத்தி விஷயத்தை சொன்னார்.. அடுத்த 2 நிமிஷத்தில் போலீசார் அங்கு வந்துவிட்டனர்.. பாத்ரூமில் இருந்து மல்லிகாவை பத்திரமாக மீட்டனர்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

இதை பற்றி மல்லிகா சொல்லும்போது, "அப்போ மணி காலைல 11 மணி.. அந்த பாத்ரூம் ரொம்ப சின்னதா இருந்தது.. கதவின் தாழ்ப்பாளில் என்னவோ பிரச்சனை.. நேரம் ஆக ஆகதான் கொஞ்சம் பயமா இருந்தது.. கத்தி கூப்பிட்டு பார்த்தேன் யாரும் வரவில்லை.. அந்த பாத்ரூம் ஊழியர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தது.. அப்பதான் எனக்கு SOS ஞாபகம்வந்து, அழுத்திவிட்டேன்.. என்னை பத்திரமாக மீட்டனர்" என்றார் ஆச்சரியத்துடன்!

English summary
chennai police rescued young woman from hotel bathroom with help of the kavalan app
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X