வெடிக்க காத்திருக்கும் 'ஆடியோ'... வசமாக சிக்கிய தமிழக கட்சி!
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் தமிழக அரசியல் கட்சித் தலைவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆடியோ வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் வகையில்தான் முடிவுகள் இருக்கும் என்பது அனைவரது ஆரூடம். இதற்காக கட்சிகளிடையேயான பேரங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகளை வளைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசுக்கு நெருக்கமான சாமியார் ஒருவர் மூலம் தமிழக அரசியல் கட்சிக்கும் வலை விரிக்கப்பட்டது. டெல்லியை கவனிக்கும் குடும்ப உறுப்பினர்தான் பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவு தருகிறோம் என உறுதி அளித்திருக்கிறார்.
அரவிந்த் ஜேகரிவால் மீதான தாக்குதல் முதல் முறையல்ல.. கன்னத்தில் அறைந்தவர் மிளகாய்ப் பொடியை வீசிய நபர்
தொலைபேசியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையை உளவுத்துறை பதிவு செய்து ஆடியோ, வீடியோ ரிலீஸ் செய்யும் மற்றொரு தமிழக தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த ஆடியோவை ஆளும் கட்சிகள் வெளியிடுவதை விட நீங்க வெளியிடுவதுதான் பரபரப்பை ஏற்படுத்தும் என அந்த பி டீம் தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
தங்களுக்கு கொடுத்த உறுதிமொழிக்கு எதிராக, தேர்தலுக்குப் பின்னர் அந்த தமிழக கட்சி ஏதேனும் ஒரு முடிவை எடுத்தால் அப்போது ஆடியோ வெளியிடப்படுமாம்.