பொள்ளாச்சி பாலியல் விவகாரம்… இளம் பெண்களுக்கு உதவி செய்ய தயார்… பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுத்தால் அவர்களுக்கு உதவி செய்யத் தயார் என்று சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இளம் வயது பெண்களுக்கு ஒரு தந்தை போல் தேவையான அனைத்து உதவிகளையும் கண்டிப்பாக செய்வேன். யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் கொடிய குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக கேட்கிறேன்.
தயவு செய்து நீங்கள் புகார் கொடுங்கள். உங்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் கண்டிப்பாக ஒரு தந்தை போல் செய்வேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .
வீடியோவாடா எடுக்கறீங்க வீடியோ.. போடு.. பொள்ளாச்சி காம கும்பலை சரமாரியாக தாக்கிய மக்கள்- வைரல் வீடியோ
ஏதோ, ஒரு நோக்கத்தோடு திமுக இதனை அரசியல் செய்யப் பார்க்கிறது. ஒருவேளை தேர்தல் நேரம் என்பதால் இதன் மூலம் முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன். உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டால், இந்த சமுதாயத்தில் மீண்டும் சீர்கேடுகள் ஏற்பட காரணமாக அமையும் என்றார்.
முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை இண்டர்போல் கூட விசாரிக்கட்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசமாக கூறினார்.பொள்ளாச்சி விவகாரத்தில் தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் அவதூறு பரப்பப்படுவதாகக் கூறிய அவர், தங்கள் மீதான புகார்களுக்கு ஆதாரம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.மேலும் தேர்தல் நேரத்தில் அதிமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறு பரப்பப்படுகிறது என தெரிவித்தார்.