Breaking News Live: பொள்ளாச்சியில் மாணவ, மாணவிகள் போலீசால் விரட்டியடிப்பு
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் விவகாரம் இன்றும் சூடு குறைந்தபாடில்லை. நேற்று தடையை மீறி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் அக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இன்றும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தமிழகம் முழுக்க போராட்டக் களத்திற்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளன.
குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்கு மிக விரைவாக தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுபோன்றவை கோரிக்கைகளாக நீடிக்கின்றன.
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான உடனுக்குடன் தகவல்களை அறிய இந்த லைவ் பக்கத்தில் இணைந்து இருங்கள்.
சூலேஸ்வரன்பட்டியில் உள்ள நாகராஜின் பாரை பொதுமக்கள் அடித்து சூறையாடினர்
நாகராஜ் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
அதிமுகவின் அம்மா பேரவை செயலாளராக இருந்தவர் பார் நாகராஜ்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை அடித்து கைதானவர்
பொதுமக்கள் கடும் கொந்தளிப்பை அடுத்து இவரை அதிமுகவிலிருந்து இபிஎஸ்- ஓபிஎஸ் நீக்கினர்