சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு மாதமாக நடந்த தேடுதல் வேட்டை.. பொள்ளாச்சி வழக்கில் போக்கு காட்டிய மணிவண்ணன்.. போலீசில் சரண்

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய மணிவண்ணன் தற்போது போலீசில் சரண் அடைந்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீசுக்கு போக்கு காட்டி வந்த மணிவண்ணன் போலீசில் சரண்

    சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் தொடர்புடைய மணிவண்ணன் தற்போது போலீசில் சரண் அடைந்து இருக்கிறார். இவரை போலீசார் கடந்த ஒரு மாதமாக தேடி வந்தனர்.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய பலர் இன்னும் வெளியில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்போது புதிய நபர் ஒருவர் இதில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    பெண்களை ஈர்க்கும் ஆண்கள்.. டாக்டர் ஷாலினி போட்ட கமெண்ட்.. கொதித்தெழுந்த நாம் தமிழர் தொண்டர்கள்! பெண்களை ஈர்க்கும் ஆண்கள்.. டாக்டர் ஷாலினி போட்ட கமெண்ட்.. கொதித்தெழுந்த நாம் தமிழர் தொண்டர்கள்!

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்த கும்பல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்களை மோசமாக கொடுமை செய்த கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேர் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.

    கைதாகி வெளியானார்கள்

    கைதாகி வெளியானார்கள்

    இந்த கும்பல் குறித்து முதலில் புகார் அளித்தது பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர். இந்த பெண்ணின் அண்ணனை 5 பேர் கொண்ட கும்பல் சில நாள் முன் மோசமாக தாக்கி இருக்கிறார்கள். பார் நாகராஜ், பாபு, செந்தில் குமார், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் இந்த செயலை செய்துள்ளனர். இதில் பார் நாகராஜ், பாபு, செந்தில் குமார், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    வெளியே வந்தனர்

    வெளியே வந்தனர்

    பார் நாகராஜ் அதிமுகவில் உறுப்பினராக இருந்தவர். இந்த பிரச்சனைக்கு பின் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் சிறை சென்ற மூன்றே நாட்களில் இவர்கள் நான்கு பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். மணிவண்ணனை மட்டும் போலீசார் தேடி வந்தனர்.

    சரண் அடைந்தார்

    சரண் அடைந்தார்

    பார் நாகராஜனின் கூட்டாளியான மணிவண்ணன் கடந்த ஒரு மாதமாக போலீசுக்கு போக்கு காட்டி தலைமறைவாகி இருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் திடீரென்று கோவை போலீசில் இவர் சரண் அடைந்தார். இவருக்கும் பொள்ளாச்சி வழக்கிற்கும் முக்கிய தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சரண் அடைந்தது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

    English summary
    Pollachi Sex Crime: Manivannan surrendered to Coimbatore police, Who went dark for last one month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X