பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு.. சைபர் கிரைம் முன் நக்கீரன் கோபால் சார்பில் வக்கீல் ஆஜர்!
மூத்த பத்திரிக்கையர் நக்கீரன் கோபால் இன்று சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜராக உள்ளார்.
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலின் சார்பில் அவரது வழக்கறிஞர் இன்று சென்னை சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜரானார். நக்கீரன் கோபால் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் வக்கீல் ஆஜராகி உள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீது புகார் அளித்துள்ளார். பொள்ளாச்சி வழக்கு தற்போது பெரிய விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.
பொள்ளாச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொண்ட குழு 7 வருடமாக பெண்களை ஏமாற்றி வந்தது தற்போது அம்பலம் ஆகி இருக்கிறது.
250க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்த கும்பலை சேர்ந்த 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்க மூத்த பத்திரிக்கையர் நக்கீரன் கோபால் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களும் முக்கியமானது. இந்த நிலையில் நக்கீரன் கோபால், நக்கீரன் இதழில் அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தாக்கி கட்டுரை எழுதி இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நக்கீரன் கோபால் பல பரபரப்பு புகார்களை அடுக்கி இருந்தார். இதனால் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை சைபர் கிரைம் போலீசில் நக்கீரன் கோபால் மீது புகார் அளித்தார். இதை அடுத்து நேற்று பத்திரிக்கையர் நக்கீரன் கோபாலுக்கு நேற்று சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியது.
இதையடுத்து நக்கீரன் கோபால் இன்று சென்னை சைபர் கிரைம் போலீஸ் முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நக்கீரன் கோபாலுக்கு பதிலாக நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் சிவக்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.