சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2014 தேர்தலை மிஞ்சுமா 2019 வாக்கு பதிவு.. மக்கள் திடீர் எழுச்சி.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்!

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ

    சென்னை: கலகலப்புகள், தகராறுகள், பஞ்சாயத்துகள், பரபரப்புகள், குழப்பங்கள், உயிரிழப்புகள், என எல்லாமே கலந்து இன்றைய தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

    கடந்த 2014 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 73.70 சதவீத வாக்குகள் பதிவானது. ஆனால் இந்த முறையோ 72 சதவீத அளவில்தான் அது வந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட ஒரு சதவீதம் குறைந்துள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் வாக்காளர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில் தேர்தல் ஆணையம் கிட்டத்தட்ட தோற்றுப் போய் விட்டது என்றே சொல்ல வேண்டும்.

    எனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம் எனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்

    உடல்நலன்

    உடல்நலன்

    தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் மக்கள் கூடி விட்டனர். தனிநபர்கள்கூட தங்கள் ஜனநாயக கடமை பற்றி அறிந்திருக்கிறார்கள். போதுமான அரசியல் ஞானமும், சமூக சூழலையும் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் வெயிலையும், உடல்நலனையும் பொருட்படுத்தாமல் வந்து ஓட்டு போட்டதை பார்த்த இளசுகள் கொஞ்சம் ஜெர்க் ஆகி போனது உண்மையே.

    ஆளுமைகள்

    ஆளுமைகள்

    ஒருசில குறைபாடுகள் இருந்தாலும் இந்த வாக்கு சதவீதம் குறைந்தது யாரும் எதிர்பாராதது. குறிப்பாக கருணாநிதி, ஜெயலலிதா என்ற ஆளுமைகள் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் இது. தலைவர்களை பார்த்து, அவர்களால் ஈர்க்கப்பட்டு, ஓட்டு போடும் சூழ்நிலை இப்போது இல்லை. இவையெல்லாவற்றையும் தாண்டி வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

    மறியல்

    மறியல்

    ஓசூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்களுக்குப் போக முடியாமல் தவித்தனர். சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சொன்னாலும், முக்கிய பஸ் ஸ்டேண்டுகளில் பஸ் கிடைக்காமல் மக்கள் மறியல் செய்ததுதான் மிச்சம். ஒருவேளை உரிய முறையில் பஸ்களை ஏற்பாடு செய்திருந்தால் இன்னும் வாக்கு பதிவு அதிகமாகி இருந்திருக்கும்.

    கள்ளழகர்

    கள்ளழகர்

    அதேபோல, மதுரையில் இன்று சித்திரைத் திருவிழா விஷேசம்.. அழகர் ஆத்துல இறங்க போகிறார். இதனால் இரவு 8 மணி வரை வாக்குபதிவு நேரம் நீடித்தாலும், வைபவ நிகழ்வு காரணமாக எத்தனை பேர் ஓட்டு போட்டார்கள், அதற்கான சூழலில் அவர்கள் இருந்தார்களா என தெரியவில்லை. ஒருவேளை கள்ளழகர் விசேஷம் இல்லையென்றாலோ அல்லது வேறு நாளில் வாக்குப் பதிவை நடத்தியிருந்தாலோ, மதுரையில் இன்னும் வாக்கு பதிவு நிறையவே விழுந்திருக்கும்.

    பூத் சிலிப்

    பூத் சிலிப்

    ஆதார் அட்டை இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் என இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும் நிறைய பேருக்கு ஓட்டு போட முடியாமல் போனதும் நடந்தது. ஒருவேளை தேர்தல் ஆணையம் இன்னும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தால் இந்த வாக்கு சதவீதமானது 80 சதவீதமாகக் கூட உயர்ந்திருக்கலாம். ஆனால் மொத்தமாக பல காரணிகள் வாக்கு சதவீதத்தை குறைத்து விட்டன என்பதே உண்மை.

    இந்த வாக்குப் பதிவால் யார் பலனடையப் போகிறார். யார் நஷ்டப்படப் போகிறார் என்பது மே 23ம் தேதி தெரிய வரும்.

    English summary
    Lok Sabha elections Phase 2 Polling is over in Tamil Nadu and Voting percentage is said to be 73.70
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X