ரஜினி மட்டுமில்லை.. நானும் சொல்கிறேன்.. தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கு.. பொன்னார்
சென்னை: தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் இருப்பதாக ரஜினி மட்டுமல்ல, நானும் சொல்கிறேன் என மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வெள்ளிக்கிழமை இயக்குநர் சிகரம் கே பாலசந்தரின் சிலை திறப்பு விழாவுக்கு சென்றுவிட்டு போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில் தமிழகத்தில் ஆளுமையான திறமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்றார். இதை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மறுத்து வருகின்றன.
9 மேயர் பதவிகளை அள்ள முடிவு.. முக்கிய வாரிசுகளுக்கு செம லக்.. திமுக கட்சியின் மாஸ்டர் பிளான்!
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தி நகரில் இன்று சந்தித்தார். அவர் கூறுகையில் தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கிறது என ரஜினி மட்டுமில்லை. நானும் சொல்கிறேன்.
ஆளுமைமிக்க கருணாநிதி, ஜெயலலிதா போல் தற்போதைய தலைவர்கள் யாரும் இல்லை. முரசொலி இடம் யாருக்கு சொந்தம் என்று அதிகாரிகளைக் கொண்டு முதல்வர் வெளிப்படையாக காண்பிக்க வேண்டும். பஞ்சமி நிலம் வைத்திருப்பதை போன்ற பெரும் பாவச் செயல் வேறு ஏதும் இல்லை என்றார்.